×

சிறுமிக்கு பாலியல் தொல்லை

 

ஜெயங்கொண்டம், நவ.26: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகில் உள்ள பாப்பாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுமார் (36) கொத்தனார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கட்டிட தொழிலாளி. இவர் மீன்சுருட்டி பகுதியில் கட்டிட வேலைக்கு செல்லும் போது அதே பகுதியில் உள்ள ஒரு 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி உறவினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இதை அறிந்த பெற்றோர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து சிறுமியின் பெற்றோர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து விட்டு தலைமறைவாக உள்ள பாலகுமாரை தேடி வருகின்றனர்.

The post சிறுமிக்கு பாலியல் தொல்லை appeared first on Dinakaran.

Tags : Jayangondam ,Balakumar ,Pappakkudi ,Ariyalur district ,
× RELATED டெங்கு காய்ச்சல் தடுப்பு...