×

தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்: ப.சிதம்பரம் வலியுறுத்தல்

கொல்கத்தா: தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு ப.சிதம்பரம் அளித்த நேர்காணலில், “இடஒதுக்கீட்டின் பயன்கள் அனைவரையும் முழுமையாக சென்று சேர சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது அவசியம்.

கர்நாடாக, பீகார் மாநிலங்கள் ஏற்கனவே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி முடித்து விட்டன. சட்டீஸ்கர், ஒடிசா, ஆந்திரா அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த போவதாக தெரிவித்துள்ளன. இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட வேண்டும். கடந்த 2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பை ஒன்றிய அரசு நடத்தவில்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பை மாநிலங்கள் செய்ய முடியாது என்பதால் இந்த மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துகின்றன. 2023ம் ஆண்டு முடிய போகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கு முன் ஒன்றிய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தாது. 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பும், சாதிவாரி கணக்கெடுப்பும் ஒரேநேரத்தில் நடத்தப்படும் என காங்கிரஸ் உறுதி அளித்துள்ளது” என்று தெரிவித்தார்.

The post தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது அவசியம்: ப.சிதம்பரம் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : P Chidambaram ,Kolkata ,Senior ,Congress ,P. Chidambaram ,Dinakaran ,
× RELATED நிதி வழங்குவதில் பாராபட்சம் கூட்டாட்சிக்கு சாவுமணி: ப.சிதம்பரம் விளாசல்