×

மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணம் குமரி வாலிபரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டன: திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு இதயம் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டது

திருவனந்தபுரம்: மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவால் மரணமடைந்த குமரி வாலிபரின் உடல் 6 பேருக்கு பொருத்தப்பட்டன. குமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் சேகர். இவரது மனைவி கீதா. நர்சாக பணிபுரிந்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் செல்வின் சேகருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டது. திருவனந்தபுரத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டது தெரியவந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் நேற்று முன்தினம் செல்வின் சேகர் மரணமடைந்தார்.

இந்நிலையில் கணவனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய கீதா முன் வந்தார். இதையடுத்து செல்வின் சேகரின் இதயம் எர்ணாகுளத்திலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 16 வயதான ஹரி நாராயணன் என்ற சிறுவனுக்கு பொருத்த ஹெலிகாப்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது. மேலும் ஒரு சிறுநீரகம் மற்றும் கணையம், ஒரு சிறுநீரகம் , 2 கண்கள் ஆகியவை 5 பேருக்கு பொருத்தப்பட்டன.

* தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை
சரல்விளை பகுதியை சேர்ந்த செல்வன் சேகர் மூளை சாவினால் மரணமடைந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்தமைக்காக தமிழ்நாடு அரசு சார்பில் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தப்ட்டது. பத்மநாபபுரம் சப்.கலெக்டர் கவுசிக் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் பிரின்ஸ் பயஸ், கிள்ளியூர் தாசில்தார் அனிதாகுமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணம் குமரி வாலிபரின் உடல் உறுப்புகள் 6 பேருக்கு பொருத்தப்பட்டன: திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு இதயம் ஹெலிகாப்டரில் கொண்டு செல்லப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Thiruvananthapuram ,Ernakulam ,Vilavankode ,Kumari district ,
× RELATED கேரளாவில் ஓடும் ரயிலில் குமரி மாடல் அழகியிடம் அத்துமீறிய வாலிபர் கைது