×

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார்: போக்குவரத்து மாற்றம்; டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை

சென்னை: திருவண்ணாமலை கார்த்திக்கை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து சீர் செய்ய 14 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி வெளியிட்ட அறிக்கை: கார்த்திக்கை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை பாதுகாப்பு பணி மற்றும் போக்குவரத்து சீர் செய்ய 14 ஆயிரம் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குற்றச் செயல்களை கண்காணிக்க 10 ட்ரோன் கேமராக்கள், திருட்டு, கொள்ளை குறித்து 10 இடங்களில் எல்இடி திரை மூலம் விழிப்புணர்வு காணொளி, காணாமல் போன குழந்தைகளைக் கண்டறிய 35 ஆயிரம் ரிஸ்ட் பேன்ட்ஸ், தலைமையக காவல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க 19 இடங்களில் 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

பக்தர்களின் போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி திருவண்ணாமலை வேலூர் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு வேலூர், ஆரணி ஆற்காடு, திருத்தணி ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை தீபம் நகர் ரிங் ரோட்டிலிருந்து அரசு மருத்துவக்கல்லூரி, அவலூர்பேட்டை ரிங்ரோடு ஜங்சன், ரயில்வே கேட் வழியாக அண்ணாஆர்ச் தற்காலிக பேருந்து நிலையம் வந்து சேரும். அண்ணா ஆர்ச் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு திருத்தணி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் தென்றல் நகர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீபம் நகர் வழியாக செல்லும்.

காஞ்சிபுரம் வந்தவாசி, அவலூர்பேட்டை சேத்பட்டு ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை ரிங்ரோடு முன்பு எஸ்ஆர்ஜிடிஎஸ் பள்ளி எதிரில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும். சென்னை, புதுச்சேரி, செஞ்சி ஆகிய வழித் தடங்களிலிருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை மார்க்கெட்டிங் கமிட்டி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும். இந்த தற்காலிக பேருந்து நிலையத்தில் அளவுக்கு அதிகமாக உள்ள பேருந்துகள் ரிங்ரோட்டில் உள்ள ஆறுமுகநார் நகர் காலி இடத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்க்கு வந்து செல்லும். மேலும் வேட்டவலம், விழுப்புரம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் திருவண்ணாமலை ரிங்ரோடு ஏந்தல் கிராமத்தில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.

திருக்கோவிலூர், பண்ருட்டி, கடலூர், மதுரை, நெல்லை, திருச்சி, ராமநாதபுரம், கும்பகோணம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் பேருந்துகள் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வந்து சேரும். பேருந்துகள் அதிகப்படியாகும் பொழுது நெய்வேலி, கடலூர், சிதம்பரம், கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர் வழித்தடப் பேருந்துகள் அருணை மருத்துவக்கல்லூரி எதிரில் உள்ள மைதானத்திற்கு அனுப்பப்படும். கள்ளக்குறிச்சி அரூர், சேலம், தண்டராம்பட்டு ஆகிய ஊர்களிலிருந்து தண்டராம்பட்டு சாலை வழியாக வரும் பேருந்துகள் தேனிமலை அங்காள பரமேஸ்வரி கோவில் வழியாக மணலூர்பேட்டை சாலையில் சென்று எஸ்கே ஸ்டீல் எதிரில் உள்ள (காலிஇடம்) தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து சேரும்.

பின்னர், மணலூர்பேட்டை சாலையில் உள்ள ரவுண்டானாவில் வலது புறம் திரும்பி தண்டராம்பட்டு சாலையை அடைந்து தங்களது ஊர்களுக்கு செல்லும். தியாகதுருகம், மணலூர்பேட்டை ஆகிய ஊர்கள் வழியாக வரும் பேருந்துகள் மணலூர்பேட்டை சாலையில் திருவண்ணாமலை அருகில் உள்ள ரவுண்டானாவில் இடதுபுறம் திரும்பி மம்மிடாடி திருமண மண்டபத்தின் வலது புறம் திரும்பி தேனிமலை அங்காள பரமேஸ்வரி கோவில் வழியாக மணலூர்பேட்டை சாலையில் சென்று எஸ்கே ஸ்டீல் எதிரில் உள்ள (காலிஇடம்) தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்துசேரும். பின்னர் காட்டாம் பூண்டி மற்றும் மணலூர் பேட்டை வழியாக தங்களின் ஊர்களுக்கு செல்லும்.

பெங்களூர், ஒசூர் கிருஷ்ணகிரி கோயம்பத்தூர், ஈரோடு. சேலம், தருமபுரி, திருப்பத்தூர். வாணியம்பாடி, குப்பம், கேசிஎப் ஆகிய வழித்தட பேருந்துகள் கிரிவலப்பதை அருகில் உள்ள அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்திற்க்கு வந்து செல்லும் பேருந்துகள் அதிகமாகும் போது அருகில் உள்ள கங்கையம்மன் கோவில் (காலியிடம்) மற்றும் சுபிக்ஷா கார்டன் அருகி தற்காலிக பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும். தேவைப்படும் பொழுது அத்தியந்தல் தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அனுப்பப்படும்.

புதுப்பாளையம், காஞ்சி, கடலாடி, மேல்சோழங்குப்பம் ஆகிய வழித்தடங்களில் இருந்து வரும் வாகனங்கள் மற்றும் பேருந்துகள் ஆடையூர் டான் பாஸ்கோ சிகரம் அருகில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும். திருவண்ணாமலை நகரத்தை சுற்றியுள்ள கார் நிறுத்தும் இடங்களை எளிதில் கண்டறிய https://tvmpolicedeepam2023.com/ என்ற இணையதளத்தை பயன்படுத்தலாம். குழந்தைகள் காணாமல் போவது சம்பந்தமான உதவிக்கு 9342116232 8438208003 ஆகிய எண்களையும் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.

திருவண்ணாமலை நகரத்தை சுற்றியுள்ள கார் நிறுத்தும் இடங்களை எளிதில் கண்டறிய
044 28447703
044 28447701
8939686742
ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.

The post திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்பு பணியில் 14 ஆயிரம் போலீசார்: போக்குவரத்து மாற்றம்; டிஜிபி சங்கர் ஜிவால் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvannamalai Karthikai Deepa festival ,DGP ,Shankar Jiwal ,Chennai ,
× RELATED நெல்லை, வேலூர், தாம்பரம் டிஎஸ்பிக்கள்...