×

பருவமழை தீவிரம்: நீர்வரத்து அதிகரிப்பு

*அணைகளில் நீர் மட்டம் உயர்கிறது

மஞ்சூர் : வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மாவட்டத்தில் மின் உற்பத்திக்கு நீராதாரமாக உள்ள பெரும்பாலானஅணைகளிலும் நீர் மட்டம் மள,மளவென உயர்ந்து வருகிறது.நீலகிரி மாவட்டத்தில் 12 நீர் மின் நிலையங்கள் இயங்கி வருகிறது. அப்பர்பவானி,அவலாஞ்சி,எமரால்டு,பைக்காரா, கிளன்மார்கன் உள்ளிட்ட பல்வேறு அணைகளில் தேக்கி வைக்கப்படும் நீரின் மூலம் மேற்படி மின் நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் குந்தா மின்நிலையத்தில் 60 மெகாவாட், கெத்தை மின்நிலையத்தில் 175 மெகாவாட்,பரளி மின் நிலையத்தில் 180 மெகாவாட், பில்லுார் மின்நிலையத்தில் 100 மெகாவாட், அவலாஞ்சி மின்நிலையத்தில் 40 மெகாவாட், காட்டு குப்பை மின்நிலையத்தில் 30 மெகாவாட், சிங்காரா மின் நிலையத்தில் 150 மெகாவாட், பைக்காரா மின் நிலையத்தில் 59.2 மெகாவாட், பைக்காரா மைக்ரோ மின் நிலையத்தில் 2 மெகாவாட், முக்குருத்தி மைக்ரோ மின் நிலையத்தில் 0.70 மெகாவாட், மாயார் மின் நிலையத்தில் 36 மெகாவாட்,மரவகண்டி மின் நிலையத்தில் 0.75 மெகாவாட் என மொத்தம் 833.65 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் உள்ளவையாக உள்ளது.

மாநிலத்தில் மொத்த மின் உற்பத்தியில் 10சதவீதம் மின்சாரம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள நீர் மின்நிலையங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மின் தேவை அதிகமாக உள்ள ‘பீக் அவர்ஸ்’ எனப்படும் காலை மற்றும் மாலை நேரங்களின் மின் தேவையை மேற்படி நீர் மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் பூர்த்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் மின்நிலையங்களில் மின்சார உற்பத்திக்கு பின்மின் நிலையங்களில் இருந்து ெவளியேற்படும் தண்ணீரானது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதுடன்
கோவை,ஈரோடு மாவட்டங்களை உள்ளடக்கிய பவானி பாசனப் படுகை விவசாயிகளின் முக்கிய நீராதாரமாகவும் உள்ளது. மேற்படி அணைகளுக்கு ஆண்டுதோறும் பெய்யும் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழைமுக்கிய ஆதாரமாக உள்ளது. இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் துவங்கவேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கிய நிலையில்எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து பாதிக்கப்பட்டது.

பெரும்பாலான மின் நிலையங்களிலும் அணைகளில் இருப்பில் இருந்த நீரை கொண்டு மின் உற்பத்தி மேற்கொள்ளப்பட்டதால் நீர் மட்டம் பெருமளவு குறைந்து போனது. மழை பெய்யாத பட்சத்தில் கோடை காலத்தில் மின் நிலையங்களில் மின்சாரஉற்பத்தியில் சிக்கல் ஏற்படும் என கருதப்பட்டது. இந்நிலையில் வட கிழக்கு பருவமழை தாமதமாக துவங்கினாலும் மழை தீவிரம் அடைந்துள்ளதுடன் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இந்த மழையால் ஆறுகள், சிற்றோடைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்தோடுவதுடன் அருவிகளிலும் நீர் கொட்டுகிறது. மலைப்டபகுதிகளில் புதிய அருவிகளும்தோன்றியுள்ளது. இதனால் அணைகளுக்கான நீர்வரத்துஅதிகரித்துள்ளதுடன் அணைகளின் நீர் மட்டம் மள,மளவென உயர்ந்து வருகிறது.

கிண்ணக்கொரை சுற்றுப்புற பகுதிகளில் பெய்த கன மழையால் கெத்தை ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடுகிறது. இதனால் மஞ்சூர் அருகே உள்ள கெத்தை மின் அணையில் நீர் மட்டம் பெருமளவு உயர்ந்துள்ளது. அணையில் நீர் வரத்து அதிகரித்துள்ளதை தொடர்ந்து கெத்தை மின்நிலையத்தில் மின் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

The post பருவமழை தீவிரம்: நீர்வரத்து அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : North East ,Dinakaran ,
× RELATED மெட்ரோ ரயில் பணி இடங்களில் மாற்று...