போச்சம்பள்ளி, நவ.25: நாடு முழுவதுமாக வரும் 26ம்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படவுள்ளது. இதற்காக போச்சம்பள்ளி சுற்றவட்டார பகுதிகளில், களிமண்ணால் ஆன ஒரு முகம், 2 முகம், 3 முகம், பஞ்சமுகம், அச்சு விளக்குகள், பாவை விளக்கு உள்ளிட்ட பல்வேறு விளக்குகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டு உள்ளது. சாதாரன அகல் விளக்குகள், மொத்த விலையில் 50 பைசா துவங்கி, சைசுக்கு ஏற்ப ஒரு ரூபாய் வரையிலும், அச்சு விளக்குகள், 80 பைசா முதல் விற்பனை செய்யப்படுகிறது. போச்சம்பள்ளியைச் சேர்ந்த வியாபாரிகள், விருத்தாசலம் பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த விளக்குகளை மொத்தமாக வாங்கி வந்து, நகரில் முக்கிய மக்கள் கூடம் இடங்கள், கோயில் வாசல், கடைவீதி, சந்தை ஆகிய பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர். கார்த்திகை தீபத்துக்கு 3 நாட்கள் விளக்கேற்றி வழிபாடு செய்வதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் போச்சம்பள்ளி பகுதியில் நேற்று அகல் விளக்குகள் விற்பனை களைகட்டியது.
The post அகல்விளக்கு விற்பனை ஜோர் appeared first on Dinakaran.