×

போடி அருகே தகராறில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு

போடி, நவ. 25: போடி அருகே உள்ள பொட்டல்களத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் அழகுராஜா (38). சில தினங்களுக்கு முன்பு, மீனாட்சிபுரத்தில் வ.உ.சி சிலை அருகே டூவீலரில் இவர் சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் மீனாட்சிபுரத்தை சேர்ந்த முத்துச்சாமி மகன் அழகுராஜா ஓட்டி வந்த டூவீலர், எதிர்பாரதவிதமாக பொட்டல்களத்தை சேர்ந்த அழகுராஜா டூவீலரின் பின்புறத்தில் மோதியது.

இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் இருவருக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று மீனாட்சிபுரம் அழகுராஜா, அவரது தந்தை முத்துச்சாமி, உறவினர் பாண்டி ஆகிய மூன்று பேரும் சேர்ந்து பொட்டல்களத்தை சேர்ந்த அழகுராஜாவை ஆபாசமாக பேசியதுடன், சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பொட்டல்களம் அழகுராஜா, அவரது தந்தை முத்துச்சாமி, உறவினர்கள் ஸ்டாலின், கரிகாலன் ஆகியோர் மீனாட்சிபுரம் அழகுராஜாவை ஆபாசமாக பேசியதுடன், மிரட்டியுள்ளனர். இது குறித்து போடி தாலுகா காவல் நிலையத்தில் இருவரும் தனித்தனியாக புகார்கள் அளித்தனர். இவற்றின் அடிப்படையில் 7 பேர் மீதும் எஸ்.ஐ விஜயலட்சுமி வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

The post போடி அருகே தகராறில் ஈடுபட்ட 7 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Bodi ,Palanichamy ,Aghuraraja ,Potalkalam ,Dinakaran ,
× RELATED போடி-தேவாரம் சாலையில்...