×

புரோ கபடி லீக் 2ம் தேதி தொடக்கம்; இளம் ரைடர்கள் சிறப்பாக ஆடுவர்: பெங்கால் கேப்டன் மணீந்தர்சிங் பேட்டி


மும்பை: 12 அணிகள் பங்கேற்கும் 10வது புரோ கபடி லீக் தொடர் வரும் 2ம் தேதி தொடங்குகிறது. அகமதாபாத்தில் அன்று நடைபெறும் முதல் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. லீக் சுற்று போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதனிடையே 10வது சீசனுக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. இதனிடையே பெங்கால் வாரியர்ஸ் கேப்டனாக மணீந்தர் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப்பை சேர்ந்த மணீந்தர் சிங் 2017 முதல் பெங்கால் அணிக்காக ஆடி வரும் நிலையில் அவரின் தலைமையில் 2019ம் ஆண்டு பெங்கால் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த முறை அவரை 2.12 கோடி ரூபாய்க்கு பெங்கால் அணி ஏலம் எடுத்துள்ளது.

நடப்பு சீசனுக்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட அவர் கூறியதாவது: நான் சில ஆண்டுகளாக பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் உள்ளேன். இதனால் பெங்கால் எனது 2வது வீடு ஆகிவிட்டது. மீண்டும் பெங்கால் அணியுடன் இணைந்தது ஆச்சரியமாக இருக்கிறது. அணி ஏற்கனவே ஒரு செட் கலவையைப் பெற்றுள்ளது, அது நிச்சயமாக நன்மையைத் தரும். நிதின் மற்றும் பிரசாந்த் போன்ற புதிய திறமையான ரைடர்கள் உள்ளனர். ஸ்ரீகாந்த் நல்ல ஃபார்மில் இருக்கிறார். ரெய்டு செய்யும்போது தாக்குதலில் கூடுதல் பரிமாணம் கொடுப்பார். இளம் ரைடர்கள் சிறப்பாக ஆடுவார்கள் எதிர்பார்க்கிறேன்.

நாங்கள் இப்போது கோப்பையைப் பற்றி சிந்திக்கவில்லை. சீசனை சிறப்பாக தொடங்குவதில் தான் கவனம் உள்ளது. இந்த சீசனில் அணி காயமில்லாமல் இருக்கும் என்று நம்புகிறோம், ஒவ்வொரு ஆட்டத்தையும் ஒரே மாதிரியான விளையாட்டுத் திட்டத்துடன் அணுகுவோம், என்றார். பெங்கால் தனது முதல் போட்டியில் டிச. 4ம் தேதி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதுகிறது.

The post புரோ கபடி லீக் 2ம் தேதி தொடக்கம்; இளம் ரைடர்கள் சிறப்பாக ஆடுவர்: பெங்கால் கேப்டன் மணீந்தர்சிங் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Pro Kabaddi League ,Young Riders ,Bengal ,Maninthersing ,Mumbai ,10th Pro Kabaddi League Series ,Ahmedabad ,Manindersing ,Dinakaran ,
× RELATED பெங்கால் மட்டம் பகுதியில் பழுதான கான்கிரீட் நிழற்கூரை பயணிகள் கடும் அவதி