×

ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது இளம்பெண் டாக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு: கீழ்ப்பாக்கத்தில் பரபரப்பு


சென்னை: சென்னை கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையை சேர்ந்தவர் பிரவீன். கண் டாக்டரான இவருக்கு அன்விதா(24) என்ற மகள் உள்ளார். டாக்டரான அன்விதா, தனியார் மருத்துவமனை ஒன்றில் பயிற்சி டாக்டராக பணியாற்றி வந்தார். வழக்கமாக அன்விதா தனது உடல் நலனில் மிகவும் அக்கறை கொண்டவர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தினமும் உடற்பயிற்சி செய்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் இரவு அன்விதா உடற்பயிற்சி கூடத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது திடீரென அன்விதா உடற்பயிற்சியின் போதே மயங்கி விழுந்தார். இதை பார்த்த சக உடற்பயிற்சி மைய ஊழியர்கள் டாக்டர் அன்விதாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது, அன்விதா ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதன்படி சம்பவம் குறித்து அன்விதாவின் தந்தையான கண் டாக்டர் பிரவீனுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் சம்பவம் குறித்து தகவல் அளிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது டாக்டர் அன்விதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு இறந்ததால், அவர் இயற்கை மரணம் என சான்று அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருந்தாலும், மருத்துவமனை தகவலின் படி போலீசார் அன்விதா இறந்தது குறித்து உடல் பயிற்சி கூடத்தில் உள்ள சிசிடிவி பதிவுகளை பெற்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜிம்மில் உடற்பயிற்சி செய்த போது இளம்பெண் டாக்டர் மாரடைப்பால் உயிரிழப்பு: கீழ்ப்பாக்கத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Praveen ,New Avadi Road, Kilpakkam, Chennai ,Anvita ,Kilpauk ,
× RELATED சென்னையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட...