- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- இந்து மதம்
- துறை
- திமுக
- சென்னை
- சென்னை அடார்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்து சமய
- தின மலர்
சென்னை: சென்னை அடையாறில் நடைபயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், முதியவர் ஒருவர் உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியில் தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நடைபயிற்சியின் போது அங்கு வாக்கிங் செல்வோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பது வழக்கம். அப்போது அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதன் போல சகஜமாக பேசுவது வழக்கம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் பலர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்வதும் உண்டு. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வாக்கிங் சென்றார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த பெரியவர், கனரா வங்கியின் ஓய்வு பெற்ற உதவி பொதுமேலாளர் ஏ.வெங்கட்ராமன் முதல்வர் மு.க.ஸ்டாலினை வழியில் சந்தித்தார். அப்போது அவர் முதல்வர் அவர்களிடம், “சார், ஒரு நிமிடம்! என்னுடைய கருத்தைக் கூறலாமா?” என்று வினவினார். உடனே முதல்வர் மு.க.ஸ்டாலினும் “சொல்லுங்கள்” என்றார். உடனே கனரா வங்கியின் ஓய்வுபெற்ற உதவி பொதுமேலாளர் ஏ.வெங்கட்ராமன் தனது கருத்தை தெரிவித்தார்.
அப்போது, “ரொம்ப பிரமாதமா இருக்கு சார் உங்கள் நிர்வாகம். சிலர் சொல்றாங்க, நீங்க டெம்பிளுக்கு ஒண்ணும் பண்றதில்லைன்னு. ஆனால் உங்க அட்வைஸ்ல சேகர்பாபு அழகா பண்ணி அதுக்கு இன்கம்லாம் வரவைக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை மிகச்சிறப்பாக செயல்படுகின்றது. இதனை நான் மட்டும் சொல்லவில்லை. எல்லோரும் சொல்கிறார்கள். உங்களுடைய ஆட்சியில் அமைச்சராக இருக்கும் சேகர்பாபு கோயிலுக்கு வருமானத்தை அதிகரித்து இருக்கிறார். கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை யாரோ ஆக்கிரமித்து வைத்து இருக்கிறார்கள். அதனை எல்லாம் மீட்டுக் கொடுத்து இருக்கிறார். இந்த மாதிரி எல்லாம் யாரும் இதுவரை செய்ததில்லை\\” என்றார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின்: ஆமாம், ஆமாம். இன்றைக்கு அமைச்சர் சேகர்பாபு ஒரு பேட்டியில் கூட இதற்கான பதிலை நன்றாக கூறி இருக்கிறார். அடையாறு ஏ.வெங்கட்ராமன்: கோயிலில் நிறைய நடக்கிறது. குறிப்பாக கும்பாபிஷேகம் அதிகமாக நடைபெறுகின்றது. முன்பெல்லாம் கும்பாபிஷேகமே கிடையாது 10 வருசமா. இப்போது ஆயிரம் கும்பாபிஷேகங்கள் நடைபெற்று ஆயிரத்து ஓராவது கும்பாபிஷேகம் நடைபெற இருக்கின்றது. நமஸ்காரம்! இவ்வாறு உரையாடல் நடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடிய முதியவர்: திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை மிகச் சிறப்பாக செயல்படுவதாக புகழாரம் appeared first on Dinakaran.