×

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடிய முதியவர்: திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை மிகச் சிறப்பாக செயல்படுவதாக புகழாரம்


சென்னை: சென்னை அடையாறில் நடைபயிற்சியின் போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், முதியவர் ஒருவர் உரையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியில் தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார். நடைபயிற்சியின் போது அங்கு வாக்கிங் செல்வோர் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பது வழக்கம். அப்போது அவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சாதாரண மனிதன் போல சகஜமாக பேசுவது வழக்கம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் அளிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார்.

மேலும் பலர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுத்து மகிழ்வதும் உண்டு. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் வாக்கிங் சென்றார். அப்போது அப்­ப­கு­தி­யைச் சேர்ந்த பெரி­ய­வர், கனரா வங்­கி­யின் ஓய்வு பெற்ற உதவி பொது­மே­லா­ளர் ஏ.வெங்­கட்­ரா­மன் முதல்­வர் மு.க.ஸ்டாலினை வழி­யில் சந்­தித்­தார். அப்­போது அவர் முதல்­வர் அவர்­க­ளி­டம், “சார், ஒரு நிமி­டம்! என்­னு­டைய கருத்­தைக் கூற­லாமா?” என்று வின­வி­னார். உடனே முதல்­வர் மு.க.ஸ்டாலினும் “சொல்­லுங்­கள்” என்­றார். உடனே கனரா வங்­கி­யின் ஓய்­வு­பெற்ற உதவி பொது­மே­லா­ளர் ஏ.வெங்­கட்­ரா­மன் தனது கருத்­தை தெரிவித்தார்.

அப்போது, “ரொம்ப பிர­மா­தமா இருக்­கு­ சார் உங்கள் நிர்­வா­கம். சிலர் சொல்­றாங்க, நீங்க டெம்­பி­ளுக்கு ஒண்­ணும் பண்­ற­தில்­லைன்னு. ஆனால் உங்க அட்­வைஸ்ல சேகர்­பாபு அழகா பண்ணி அதுக்கு இன்­கம்­லாம் வர­வைக்­கி­றார். இந்து சமய அற­நி­லை­யத்­துறை மிகச்­சி­றப்­பாக செயல்­ப­டு­கின்­றது. இதனை நான் மட்­டும் சொல்­ல­வில்லை. எல்­லோ­ரும் சொல்­கி­றார்­கள். உங்­க­ளு­டைய ஆட்­சி­யில் அமைச்­ச­ராக இருக்­கும் சேகர்­பாபு கோயி­லுக்கு வரு­மா­னத்தை அதி­க­ரித்து இருக்­கி­றார். கோயி­லுக்­குச் சொந்­த­மான நிலங்­களை யாரோ ஆக்­கி­ர­மித்து வைத்து இருக்­கி­றார்­கள். அதனை எல்­லாம் மீட்­டுக் கொடுத்து இருக்­கி­றார். இந்த மாதிரி எல்­லாம் யாரும் இது­வரை செய்­த­தில்லை\\” என்றார்.

முதல்­வர் மு.க. ஸ்டாலின்: ஆமாம், ஆமாம். இன்­றைக்கு அமைச்­சர் சேகர்­பாபு ஒரு பேட்­டி­யில் கூட இதற்­கான பதிலை நன்­றாக கூறி இருக்­கி­றார். அடை­யாறு ஏ.வெங்­கட்­ரா­மன்: கோயிலில் நிறைய நடக்­கி­றது. குறிப்­பாக கும்­பா­பி­ஷே­கம் அதி­க­மாக நடை­பெ­று­கின்­றது. முன்­பெல்­லாம் கும்­பா­பிஷே­கமே கிடை­யாது 10 வரு­சமா. இப்­போது ஆயி­ரம் கும்­பா­பிஷே­கங்­கள் நடை­பெற்று ஆயி­ரத்து ஓரா­வது கும்­பா­பி­ஷே­கம் நடை­பெற இருக்­கின்­றது. நமஸ்­கா­ரம்! இவ்­வாறு உரையாடல் நடந்தது. இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

The post முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் உரையாடிய முதியவர்: திமுக ஆட்சியில் இந்து சமய அறநிலையத் துறை மிகச் சிறப்பாக செயல்படுவதாக புகழாரம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Hindu ,department ,DMK ,CHENNAI ,Chennai Adyar ,Tamil Nadu ,Hindu religious ,Dinakaran ,
× RELATED அம்மா உணவகங்களை தொடர்ந்து சிறப்பாக...