×

கோவையில் விவசாய குட்டையில் சிக்கிய ஆண் யானை: 4 வயதுடைய யானையை மீட்ட வனத்துறை ஊழியர்கள்

கோவை: கோவை மதுக்கரை வானசரகத்திற்கு உட்பட்ட விவசாய குட்டையில் சிக்கிய ஆண் யானை குட்டி மீட்கப்பட்டுள்ளது. கோவை மதுக்கரை வானசரகத்திற்கு உட்பட்ட மங்கலப்பாளையம் பகுதியில் விவசாய தோட்டம் உள்ளது. கோவை மாவட்டத்தில் நேற்று இரவிலிருந்து கனமழையானது பெய்து வருவதால் விவசாய குட்டையில் தண்ணீர் நிரம்பி இருந்தது. இந்நிலையில் அந்த குட்டையில் 4 வயது ஆண் யானையானது சிக்கியது.

அந்த குட்டை வனப்பகுதியில் இருந்து 700 மீட்டர் தொலைவில் இருப்பதால் அந்த வழியாக வந்த ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் குட்டி யானை சிக்கியதை கண்டறிந்தனர். பின்னர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாகா சம்பவ இடத்திற்கு பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு அந்த குட்டையில் இருந்து யானை வெளியேற்றப்பட்டு பாதுகாப்பாக வனத்துறைக்குள் விடப்பட்டுள்ளது. அந்த ஆண் யானை குட்டியை தாய் யானையுடன் ஒப்படைக்க திட்டமிட்டு வனத்துறை தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர்.

The post கோவையில் விவசாய குட்டையில் சிக்கிய ஆண் யானை: 4 வயதுடைய யானையை மீட்ட வனத்துறை ஊழியர்கள் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Madhukarai Vanasaraka ,Madhukarai Vanasaraga ,Dinakaran ,
× RELATED மழையின்றி வற்றிய குளங்கள்: சரிந்தது நிலத்தடி நீர்மட்டம்