×

சேரன்மகாதேவி அருகே மாயமான முதியவர் கன்னடியன் கால்வாயில் சடலமாக மீட்பு

வீரவநல்லூர், நவ.23: சேரன்மகாதேவி அருகே மாயமான முதியவர் கன்னடியன் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டார். நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி அடுத்த வடக்குகாருகுறிச்சி மேல கிராமம் தெருவைச் சேர்ந்தவர் சாமியாப்பிள்ளை (74). இவர் நேற்று முன்தினம் மாலை திடீரென மாயமானார். இந்நிலையில் அவர் நேற்று காலை அப்பகுதியில் உள்ள கன்னடியன் கால்வாயில் சடலமாக மிதந்தார். தகவலறிந்ததும் விரைந்துவந்த வீரவநல்லூர் போலீசார், உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து மேற்கொண்ட விசாரணையில், சாமியாப்பிள்ளை குளிக்க சென்ற போது நீரில் மூழ்கி பரிதாபமாகி இறந்த விவரம் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post சேரன்மகாதேவி அருகே மாயமான முதியவர் கன்னடியன் கால்வாயில் சடலமாக மீட்பு appeared first on Dinakaran.

Tags : Canadian canal ,Seranmagadevi ,Weeravanallur ,Kanadian Canal ,Nella District ,North Kukakurmark ,
× RELATED சேரன்மகாதேவியில் வாலிபரை தாக்கியவர் கைது