×

பயிரை நாசம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை

பாலக்கோடு, நவ.23: பாலக்கோடு அடுத்த அந்தாளிகொட்டாய் கிராமத்தை சேர்ந்த விவசாயி ஆண்டிகவுண்டர் (65). இவர் பாலக்கோடு டிஎஸ்பி மற்றும் தாசில்தாரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பாலக்கோடு அடுத்த அந்தாளிகொட்டாய் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை ஒட்டி ஓடை புறம்போக்கு நிலம் உள்ளது. இதில் கடந்த 60 வருடமாக விவசாயம் செய்து வருகிறேன். அதே பகுதியில் வசித்து வருபவர், எனது நிலத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிர்களை, வீட்டில் ஆண்கள் வெளியே சென்ற நேரம் பார்த்து, வெளியூரை சேர்ந்த அடியாட்களை அழைத்து வந்து அழித்துள்ளார். மேலும், வீட்டில் இருந்த பெண்களையும் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த பெண்கள், பாலக்ேகாடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மாரண்டஅள்ளி போலீசார் அவர்களுக்கு உடந்தையாக உள்ளனர். எனவே, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post பயிரை நாசம் செய்த நபர்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Palakodu ,Andalikottai ,Palakod DSP ,Tahsildar ,Dinakaran ,
× RELATED வாகனம் மோதி மூதாட்டி பலி