×

குடிபோதையில் மனைவியை கத்தியால் வெட்டியவர் கைது

மேல்மலையனூர், நவ. 23: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த சத்தியமங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜ் மகன் லூயிஸ் திலக்ராஜ். இவரது மனைவி அந்துகுமாரி. இவர்களுக்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். லூயிஸ் திலக்ராஜ் தொடர்ந்து குடித்துவிட்டு வந்ததால் அவரது மனைவி தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த லூயிஸ் திலக்ராஜ் தான் வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கையில் வெட்டியுள்ளார். இதுகுறித்து அந்துகுமாரி தனது அண்ணன் அந்தோணியிடம் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து கேட்டபோது அவரையும் கத்தியால் குடி போதையில் வெட்டினார். இதில் காயமடைந்த இருவரும் செஞ்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அந்துகுமாரி கொடுத்த புகாரின்பேரில் லூயிஸ் திலகராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

The post குடிபோதையில் மனைவியை கத்தியால் வெட்டியவர் கைது appeared first on Dinakaran.

Tags : Melmalayanur ,Lewis Thilakraj ,Devaraj ,Sathyamangalam ,Chenchi ,Villupuram ,Dinakaran ,
× RELATED மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில்...