சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரத்தில் மழை பெய்யக்கூடும். கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூரில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.