×

வனக்காப்பாளரை திட்டிய விவசாயி மீது வழக்குபதிவு

 

தர்மபுரி, நவ.22: தர்மபுரி மாவட்டம் அரூர் வனக்காப்பாளர் சோனியா மற்றும் வனக்காப்பாளர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மல்லிமதுரை காட்டுப்பகுதியில் சக்தி(40) என்ற விவசாயி, நாட்டு துப்பாக்கியுடன் நின்றிருந்தார். அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து வனக்காப்பாளர்கள் விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து அவரிடம் இருந்த நாட்டு துப்பாக்கியை வனக்காப்பாளர்கள் பறிமுதல் செய்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சக்தி, தகாத வார்த்தைகளால் அவர்களை திட்டினார். இதுகுறித்து வனக்காப்பாளர் சோனியா, அரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வனக்காப்பாளரை திட்டிய விவசாயி மீது வழக்குபதிவு appeared first on Dinakaran.

Tags : Dharmapuri ,Dharmapuri District ,Arur Conservator ,Forest ,Sonia ,Mallimadurai ,Dinakaran ,
× RELATED வாகன புகை பரிசோதனை மையங்கள் புதிய செயலியை நிறுவ வேண்டும்