ராஞ்சி: மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினத்தை சேர்ந்தவர் புத்னி மஞ்சியன். கடந்த 1959ம் ஆண்டு அணைக்கட்டு திட்டம் ஒன்றை தொடங்கி வைப்பதற்காக இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு தன்பத் மாவட்டம் அருகே உள்ள பழங்குடியின பகுதிக்கு சென்றார். அப்போது நேரு பழங்குடியின மக்களை கவுரவிக்கும் விதமாக அணை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த புத்னி மஞ்சியனுக்கு மாலை அணிவித்தார்.
ஆனால், சந்தால் என அழைக்கப்படும் பழங்குடியினத்தை சேர்ந்த அந்தபெண்ணின் சமூகத்தை சேர்ந்தவர்கள், பெண்ணுக்கு ஒரு ஆண் மாலை அணிவித்ததால் அதை திருமணமாக கருதினர். இதனால் அந்த பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டனர். அவர் வேலை பார்த்து வந்த தாமோதர் பள்ளத்தாக்கு கார்ப்பரேஷனிலும் இருந்து அவர் நீக்கப்பட்டார். அதன்பின்னர் ஜார்க்கண்டிற்கு குடி பெயர்ந்த புத்னி, சுதிர் தத்தா என்பரை மணந்து கொண்டார். தற்போது 80 வயதான புத்னி கடந்த 17ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
The post நேருவின் மனைவி என பழங்குடியினரால் ஒதுக்கப்பட்ட பெண் மரணம் appeared first on Dinakaran.
