- மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகராட்சி பள்ளி
- மேட்டுப்பாளையம்
- கோயம்புத்தூர்
- மாவட்ட நூலக அலுவலர்
- ராஜேந்திரன்
- மேட்டுப்பாளையம் கிளை நூலகம்
- தின மலர்
மேட்டுப்பாளையம், நவ.21: கோவை மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் வழிகாட்டுதலின்படி நேற்று மேட்டுப்பாளையம் கிளை நூலகம் 2 சார்பாக நூலக வார விழாவின் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நேற்று புத்தக வாசிப்பு நிகழ்ச்சி தலைமையாசிரியர் பேபி எஸ்தர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில். ஆர்வத்துடன் கலந்து கொண்ட மாணவர்கள் தனித்தனியாக புத்தகங்களை வாசித்து விளக்கமளித்தனர்.
அவர்களை மேட்டுப்பாளையம் கிளை நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து நூல்களை படிக்க பள்ளி ஆசிரியர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதில் நூலகர் கௌசல்யா புத்தகங்களை வாசிப்பதன் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றி மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார்.
பள்ளி ஆசிரியர் நிசார் அஹமது, அரிமா.ஜெயராமன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த நிகழ்ச்சியின் நிறைவாக பள்ளியின் ஆசிரியர் மேரி சீமாலதா நன்றி கூறினார்.
The post மேட்டுப்பாளையம் வள்ளுவர் நகராட்சி பள்ளியில் புத்தக வாசிப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.