×

ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கு உச்ச நீதிமன்றம் முடித்து வைப்பு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் கபில் சிபல் மற்றும் சபரீஸ் சுப்ரமணியன்,‘‘தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்துவதற்கு அவர்களது தரப்பில் கேட்கப்பட்ட இடங்களுக்கு அனுமதி வழங்கி, பேரணியும் நடந்து முடிந்து விட்டது.

அதனால் இந்த விவகாரத்தில் தொடரப்பட்டு இருக்கும் அவமதிப்பு வழக்கை முடித்து வைக்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தரப்பில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் வழக்கை முடித்து வைக்கிறோம் என உத்தரவிட்டனர்.

 

The post ஆர்.எஸ்.எஸ் பேரணி வழக்கு உச்ச நீதிமன்றம் முடித்து வைப்பு appeared first on Dinakaran.

Tags : RSS rally ,Supreme Court ,New Delhi ,Madras High Court ,RSS ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி நகரம்,...