×

சொந்த ஊருக்கு திரும்பிய போது 2 சகோதரர்கள் சுட்டுக்கொலை

பாட்னா: பீகார் மாநிலம் லக்கிசராய் என்ற பகுதியின் வழியாக கோயிலுக்கு சென்ற பக்தர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை வழிமறித்த ஒருவன், அவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் சகோதரர்கள் இருவர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு பெண்களும், நான்கு ஆண்களும் அடங்குவர். அப்பகுதியை சேர்ந்த மக்கள் காயமடைந்த நான்கு பேரையும் மீட்டு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக, தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.

The post சொந்த ஊருக்கு திரும்பிய போது 2 சகோதரர்கள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Lakhisarai, Bihar ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...