×

பயணிகள் கூட்டத்தில் மினி பஸ் மோதி 3 வயது சிறுவன் பலி

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தை சேர்ந்த சேர்ந்தவர் மாரீஸ்வரன். மினிபஸ் டிரைவர். இவர் நேற்று காலை, அருப்புக்கோட்டையிலுள்ள தனியார் பாலிடெக்னிக் பகுதியில் இருந்து திருக்குமரன் நகருக்கு மினிபஸ்சில் பயணிகளை ஏற்றிச் சென்றார். கண்டக்டராக அருப்புக்கோட்டை ராஜீவ்நகரை சேர்ந்த ராஜீவ் சென்றார். 10க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புது பஸ் ஸ்டாண்டிற்கு வந்த மினி பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

இதனால், அங்கிருந்தவர்கள் தெறித்து ஓடினர். மோதிய வேகத்தில் மினி பஸ் அருகிலிருந்த ஆட்டோ மீதும் மோதியது. இதில் பாலவநத்தத்தை சேர்ந்த அஜ்மீர் ரோஜா, இவரது மகன்கள் தானிஷ் அகமது(3), தானிஷ் முகமது(9), பாட்டி மீரான் பீவி(70), மற்றும் கருப்பசாமி, லட்சுமிபிரியா ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் தானிஷ் அகமது இறந்தான்.

The post பயணிகள் கூட்டத்தில் மினி பஸ் மோதி 3 வயது சிறுவன் பலி appeared first on Dinakaran.

Tags : Aruppukkottai ,Mariswaran ,Kovilangulata ,Arupukkota, Virudhunagar district ,Arupukkottai ,
× RELATED விஏஓவிடம் தகராறு செய்த இரண்டு பேர் கைது