×

காங். தொண்டர் படுகொலை பாஜ வேட்பாளரை கைது செய்யக்கோரி திக்விஜய் சிங் 2வது நாளாக போராட்டம்

சத்தர்பூர்: வாக்குபதிவின் போது கட்சி தொண்டர் கொலை தொடர்பாக பாஜ வேட்பாளரை கைது செய்யக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். மத்திய பிரதேசத்தில் கடந்த 17ம் தேதி சட்டபேரவை தேர்தல் நடந்தது. சத்தர்பூர் மாவட்டம், ராஜ்நகர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ்-பாஜ கட்சியினருக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது.இதில் சல்மான் கான் என்ற காங்கிரஸ் தொண்டர் பலியானார். இது தொடர்பாக பாஜ வேட்பாளர் அரவிந்த் பட்டேரியா உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். வாகனம் மோதியதில் சல்மான் கான் பலியானார் என போலீசார் தெரிவித்தனர். மாநில பாஜ தலைவர் வி.டி.சர்மா கூறுகையில், சல்மான் கான் விபத்தில் பலியானார் என்றார்.

இதில், சம்மந்தப்பட்ட அரவிந்த் பட்டேரியாவை கைது செய்யக்கோரி காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் போலீஸ் நிலையத்துக்கு வெளியே அமர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார். போராட்டம் 2வது நாளை நேற்று எட்டிய நிலையில் அவருடன் காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் சேர்ந்துள்ளனர். திக்விஜய் சிங் கூறுகையில்,‘‘ 20 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. விபத்து ஏற்படுத்திய காரையும் பறிமுதல் செய்யவில்லை.வழக்கை வாபஸ் வாங்க அரசு முயற்சிக்கிறது. இது விபத்து அல்ல, படுகொலை’’ என்றார்.

The post காங். தொண்டர் படுகொலை பாஜ வேட்பாளரை கைது செய்யக்கோரி திக்விஜய் சிங் 2வது நாளாக போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Kong ,Digvijay Singh ,BJP ,Chatterpur ,Congress ,Digvijay ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...