×

பூச்சி மருந்து குடித்து தொழிலாளி சாவு

கடலூர், நவ. 19: கடலூர் முதுநகர் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் மேற்கு தெருவை சேர்ந்தவர் சண்முகம் மகன் அருள்(40). கூலி தொழிலாளியான இவருக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டு வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. இதில் மன உளைச்சலில் இருந்த அருள் சம்பவத்தன்று வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அருள் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பூச்சி மருந்து குடித்து தொழிலாளி சாவு appeared first on Dinakaran.

Tags : Cuddalore ,Shanmugam ,Arul ,Subramaniapuram West Street ,Muthunagar, Cuddalore ,Dinakaran ,
× RELATED சிக்கன் ரைஸில் பூச்சிக்கொல்லி...