×

மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது

காட்டுமன்னார்கோவில், நவ. 19: காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி பகுதிகளில் அனுமதியின்றி மதுபாட்டில் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் செல்வபாண்டியன் தலைமையிலான போலீசார் குமராட்சி காவல் எல்லைக்குட்பட்ட தில்லைநாயகபுரம் நந்தவனம் பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரித்ததில், ஆழங்காத்தான் தேவர் தெருவை சேர்ந்தவர்கள் செல்லையன் மகன் அருண்(27), விக்டர் மகன் டேவிட்ராஜ் (25) என்பதும், மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்றதும் தெரியவந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

The post மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Kattumannarkoil ,Kattumannargo ,Kumaratchi ,
× RELATED யூடியூப் பார்த்து பெட்ரோல் குண்டு தயாரித்தவர் கைது..!!