×

சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுகிற ஆளுநர் தேவையா?: ஜி.கே.மணி கேள்வி

சென்னை: சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுகிற ஆளுநர் தேவையா? என்று பா.ம.க. எம்.எல்.ஏ. ஜி.கே.மணி கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநரின் செயல்பாடு தமிழ்நாட்டின் உரிமையை மதிக்காத வகையில் உள்ளது. ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் பாலமாக இருந்து ஆளுநர் செயல்பட வேண்டும். தமிழ்நாட்டுக்கு விரோதமான ஆளுநரின் போக்கு கவலை அளிக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஆளுநர் முழு மனதுடன் ஒப்புதல் தர வேண்டும் என்று ஜி.கே.மணி குறிப்பிட்டுள்ளார்.

The post சட்டமன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுகிற ஆளுநர் தேவையா?: ஜி.கே.மணி கேள்வி appeared first on Dinakaran.

Tags : G. K. ,Chennai ,M. K. ,M. L. A. G. K. ,Dinakaran ,
× RELATED மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை...