- கோமரி தடுப்பூசி முகாம்
- Tiruvaiyar
- திருவையாறு
- திருப்பாசனம்
- ராயம்பெட்டை
- திருவையாற்றில்
- கோமரி தடுப்பூசி
திருவையாறு, நவ.18: திருவையாறு அருகே கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. திருவையாறு அருகே திருப்பழனம், ராயம்பேட்டை, ஆக்கிநாதபுரம் ஊராட்சிகளில் திருப்பழனம் கால்நடை மருந்தகம் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
திருப்பழனம் கால்நடை உதவி மருத்துவர் பாலமுருகன், கண்டியூர் கால்நடை உதவி மருத்துவர் அருள்வேந்தன், பயிற்சி மருத்துவர்கள் கபிலா, கார்னிகா, கால்நடை ஆய்வாளர் மஞ்சுளா, பராமரிப்பு உதவியாளர் ஆனந்தி ஆகியோர் 300 கால்நடைகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பழனம் கால்நடை மருந்தகம் மற்றும் திருப்பழனம் ஊராட்சி தலைவர் ஜெயசுதா பிரபாகரன் மற்றும் ராயம்பேட்டை ஊராட்சி அலுவலர்கள் செய்திருந்தனர்.
The post திருவையாறு அருகே கால்நடைகளுக்கு கோமாரி தடுப்பூசி முகாம் appeared first on Dinakaran.