×

தஞ்சாவூரிலிருந்து விழுப்புரத்திற்கு 1,000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு

 

தஞ்சாவூர், நவ.18: தஞ்சாவூரில் இருந்து விழுப்புரத்திற்கு அரவைக்கு 1,000 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சாவூர் விளங்கி வருகிறது. குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அரவைக்காக அனுப்பப்பட்டு பொது வினியோகத் திட்டத்தின்கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்பப்பட்டு வருகின்றன.

இது தவிர தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரவை ஆலைகளுக்கும் அனுப்பப்படும். இந்நிலையில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல், லாரிகளில் தஞ்சாவூர் ரயில் நிலையத்துக்கு எடுத்து வரப்பட்டது. பின்னர் சரக்கு ரயிலில் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக விழுப்புரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

The post தஞ்சாவூரிலிருந்து விழுப்புரத்திற்கு 1,000 டன் நெல் அரவைக்கு அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Villupuram ,Tamil Nadu ,
× RELATED களக்காடு தலையணையில் குளிக்க தடை