- ரதிபதுல் ஜலலியா
- முத்துப்பேட்டை தர்கா காந்தூரி
- முத்துபேட்டை
- 72வது ஆண்டு காந்தூரி திருவிழா
- செக்தவுடு இறைவன் தர்கா
- ஜம்புவானோடை
- முத்துப்பேட்டை
- கந்தூரி விழா
- முத்துபெட்டாய் தர்கா
முத்துப்பேட்டை, நவ.18: முத்துப்பேட்டை அடுத்துள்ள ஜாம்புவானோடை உலக பிரசித்திபெற்ற சேக்தாவூது ஆண்டவர் தர்காவின் 722ம் ஆண்டு கந்தூரி விழா கடந்த 14ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 14 நாட்கள் நடைபெறும் இந்த கந்தூரி விழாவில் தினந்தோறும் நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் பல்வேறு நிகழ்ச்சிகளுடன் புனித தவூதியா மஜ்லிசில் நாகூர் ரிபாயிஜமா கலிபா கனிபாவா குழுவினரின் திக்ர் மற்றும் குப்பியத்து நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் நேற்று வழக்கம்போல் நிகழ்ச்சியுடன் இரவு நாகூர் அப்துல் ஹமீது பைஜி மற்றும் பானா சாஹீப் குழுவினரின் ராத்திபத்துல் ஜலாலியா நடைபெற்றது. இதில் தர்கா முதன்மை அறங்காவலர் பாக்கர் அலி சாஹீப் கலந்துகொண்டனர்.
The post முத்துப்பேட்டை தர்கா கந்தூரி விழாவில் ராத்திபத்துல் ஜலாலியா appeared first on Dinakaran.