×

கொச்சி குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் சாவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொச்சியில் உள்ள களமசேரியில் நடந்த யகோவாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ அமைப்பின் ஜெப மாநாட்டில் 29ம் தேதி காலையில் குண்டு வெடித்து இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சாலியின் மகன் பிரவீன்(24) நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதனால் இந்த குண்டுவெடிப்பில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 16 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

The post கொச்சி குண்டுவெடிப்பில் மேலும் ஒருவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Kochi ,Thiruvananthapuram ,Christian ,Yahova's Witnesses ,Kalamasery, Kochi, Kerala ,
× RELATED கொச்சி விமான நிலையத்தில் ₹6.68 கோடி...