×

தந்தை, நண்பருடன் சேர்ந்து 22 வயது காதலியை கொன்ற 16 வயது சிறுவன்: மகாராஷ்டிராவில் பயங்கரம்


தானே: தந்தை, நண்பருடன் சேர்ந்து 22 வயது காதலியை கொன்ற 16 வயது சிறுவன், அவரது நண்பரை மகாராஷ்டிரா போலீசார் கைது செய்தனர். மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் 16 வயது சிறுவன் தனது 22 வயதுடைய காதலியைக் கொன்றான். இச்சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் அனில் ஜக்தாப் கூறுகையில், ‘கடந்த அக்டோபர் 27ம் தேதி ஹாஜி மலங் மலைகளுக்கு அருகே அமைந்துள்ள பாதையின் அருகே சுமார் 22 வயதுடைய அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது அடையாளம் குறித்து வழக்குபதிந்து விசாரித்து வந்தோம். முதற்கட்ட விசாரணையில் இறந்த இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அவரது அடையாளம் கண்டறியப்பட்டது.

உலாஸ்நகரில் வசித்து வந்த அந்தப் பெண், 16 வயது சிறுவனுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார். இதையறிந்த சிறுவனின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த அக்டோபர் 25ம் தேதி ஏற்பட்ட தகராறில், அந்த பெண்ணின் காதலனாகிய சிறுவன், அவனின் தந்தை மற்றும் மற்றொரு நபர் ஒன்று சேர்ந்து அந்த பெண்ணை கழுத்தை நெரித்து கொன்றனர். பின்னர் சடலத்தை ரயில்வே பாதையில் தூக்கி வீசிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் சிறுவன், அவரது நண்பரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள சிறுவனின் தந்தையை தேடி வருகிறோம்’ என்றார்.

The post தந்தை, நண்பருடன் சேர்ந்து 22 வயது காதலியை கொன்ற 16 வயது சிறுவன்: மகாராஷ்டிராவில் பயங்கரம் appeared first on Dinakaran.

Tags : Maharashtra ,Thane ,
× RELATED ரயிலில் பறித்த செல்போனை மீட்க முயன்ற...