×

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: கலெக்டர் தகவல்

செங்கல்பட்டு, நவ. 17: செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நாளை நடைபெற உள்ளது என கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் பொது விநியோகத்திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்குவதன் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் 2வது சனிக்கிழமையன்று தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக குடும்ப அட்டை தொடர்பாக மக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த குறைதீர்க்கும் முகாம் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டு, செய்யூர், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர் மற்றும் வண்டலூர் வட்டங்களில் உள்ள ஒவ்வொரு கிராமங்களிலும் சுழற்சி முறையில் மாதந்தோறும் 2வது சனிக்கிழமை நடைபெற்று வருகிறது.

அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் வரும் 18.11.2023ம் தேதி (நாளை) வட்ட அளவில் கீழ் கண்ட கிராமங்களில் குறைதீர் முகாம் நடத்தப்படவுள்ளது. இதில், 1. செங்கல்பட்டு வட்டம் ஆத்தூர் மதுரா வடகால் கிராமம். 2. செய்யூர் வட்டம் மேல்மருவத்தூர் கிராமம். 3. மதுராந்தகம் வட்டம் மேலவேலம்பேட்டை கிராமம். 4.திருக்கழுக்குன்றம் வட்டம் வீராபுரம் கிராமம். 5. திருப்போரூர் வட்டம் மானாமதி கிராமம். 6.வண்டலூர் வட்டம் பொருமாட்டுநல்லூர் கிராமம் என இந்த பகுதிகளில் குறைதீர் முகாம் நடக்க உள்ளது. இதில், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல், கைப்பேசி எண் பதிவு, மாற்றம் செய்தல், பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தரம் குறித்த புகார்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகளை பெற்று பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Ration Card Grievance Camp ,Chengalpattu District ,Chengalpattu ,Rahulnath ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...