×

ஜெயங்கொண்டம் பகுதியில் புகையிலை விற்ற 3 பேர் கைது

 

ஜெயங்கொண்டம்,நவ.17: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் எஸ்ஐ சாமிதுரை மற்றும் போலீசார் பெட்டிக்கடைகளில் புகையிலை விற்பனை செய்யப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். அப்போது கடுகூர் வடக்கு தெருவை சேர்ந்த தங்கராசு (66), தனவேல் (58), கல்லங்குறிச்சி நடுத்தெருவை சேர்ந்த முருகானந்தம்(58) ஆகிய 3 பேரும் அவர்களது பெட்டிக்கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜெயங்கொண்டம் பகுதியில் புகையிலை விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Jeyangondam ,Jayangondam ,Ariyalur ,District ,Khairlabhabad Police ,SI Samithurai ,Jayangkondam ,Dinakaran ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே குடியிருப்பு...