×

மூதாட்டி கொலையில் லாரி டிரைவர் கைது

கடத்தூர், நவ.15: ஒடசல்பட்டியில் நடந்த மூதாட்டி கொலையில் லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார். தர்மபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் கந்தம்மாள் (72). இவர் சிறுவயதில் பக்கவாத நோய் ஏற்பட்டதால் அவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் தனியாக ஒடசல்பட்டி கூட்ரோடு பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில்., கடந்த மாதம் 22ம் தேதி கொலை செய்யபட்டு காதில் அணிந்திருந்த அரை பவுன் தோடை கொலையாளிகள் திருடி சென்றனர். இது குறித்து கடத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் கம்பைநல்லூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட தனிப்படை போலீசார் சி.சி.டி.வி., கேமராக்களை ஆய்வு செய்து தேடி வந்தனர். இந்நிலையில்., நேற்று ஒடசல்பட்டி அடுத்த கசியம்பட்டி பகுதியை சேர்ந்த லாரி டிரைவர் விஜய மனோகரன் (43) என்பவர் கந்தம்மாளை கொலை செய்து அரை பவுன் நகையை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தூர் போலீசார் விஜயமனோகரனை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post மூதாட்டி கொலையில் லாரி டிரைவர் கைது appeared first on Dinakaran.

Tags : Lorry ,Kaduur ,Odasalpatti ,Dinakaran ,
× RELATED ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்