×

வாணியம்பாடி அருகே தாயை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற கொடூர மகன்கள்

வாணியம்பாடி: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள கொடையாஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி. மனைவி ரஞ்சிதம் (85). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள். அனைவருக்கும் திருமணமாகி குடும்பத்துடன் தனித்தனியாக வசிக்கின்றனர். ேநற்று வாணியம்பாடி எல்.ஐ.சி அலுவலகம் முன்புள்ள கானாறு பகுதி அருகே ரஞ்சிதம் நீண்ட நேரமாக நின்றிருந்தார். இதைபார்த்த ஆட்டோ டிரைவர்கள், விசாரித்தனர். அப்போது, ‘எனது பெயரில் உள்ள சொத்துக்களை பிரித்து கொடுக்காததால் என்னை, பிள்ளைகள் இங்கு விட்டு சென்று விட்டனர்’ என கதறி அழுதபடி ரஞ்சிதம் கூறியுள்ளார். இதையடுத்து, ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் மற்றும் தனியார் அமைப்பினர், மூதாட்டிக்கு உணவு, தண்ணீர் வாங்கி ெகாடுத்து, டவுன் ேபாலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் அவரது மகன்களை வரவழைத்து அறிவுரை கூறி மூதாட்டியை அனுப்பி வைத்தனர்….

The post வாணியம்பாடி அருகே தாயை நடுரோட்டில் தவிக்க விட்டு சென்ற கொடூர மகன்கள் appeared first on Dinakaran.

Tags : Naturot ,Vaniyambati ,VANIYAMABADI ,RAJAMANI ,GODIYANJI ,VILLAGE ,VANIYAMPADI ,THIRUPATUR DISTRICT ,Ranjidam ,Dinakaraan ,
× RELATED வாணியம்பாடி, ஆம்பூரில் லேசான நில அதிர்வு!