×

சென்னையில் நேற்றிரவு வரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகாரட்சி

சென்னை: சென்னையில் நேற்றிரவு வரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக மாநகாரட்சி தகவல் தெரிவித்துள்ளது.இன்று இரவுக்குள் கழிவுகள் முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் சுமார் 200 டன் வரை பட்டாசு கழிவுகள் சேகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவித்தது. பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் 19,600 தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பட்டாசு கழிவுகளை கொண்டுசெல்ல மண்டலத்துக்கு 2 வாகனங்கள் என 30 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post சென்னையில் நேற்றிரவு வரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகாரட்சி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Municipality ,Municipal Corporation ,
× RELATED சுகாதார மைய மேற்கூரை சரிந்தது, மூதாட்டி படுகாயம்