×

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த குற்றவாளி 24 மணி நேரத்தில் கைது: போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு

 

சென்னை: அயனாவரம், கே.எச் சாலையை சேர்ந்த அமராவதி (88), நேற்று முன்தினம் மதியம் 12.30 மணிக்கு வீட்டில் படுத்திருந்தபோது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் மூதாட்டி கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்துக்கொண்டு தப்பினார். இதுகுறித்து மூதாட்டி அயனாவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் பிரேம் ஆனந்த் சின்கா, இணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தி மேற்பார்வையில், அயனாவரம் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து விசாரித்தனர்.

அதில், அரும்பாக்கம், ஜெய் நகரை சேர்ந்த பாபு (35) செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிந்தது. அவரை கைது செய்தனர். அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 8 சவரன் செயின், மூதாட்டியிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றவாளியை 24 மணி நேரத்தில் கைது செய்து, நகையை மீட்ட தனிப்படை போலீசாரை உயர் அதிகாரிகள் பாராட்டினர்.

The post வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியிடம் செயின் பறித்த குற்றவாளி 24 மணி நேரத்தில் கைது: போலீசாருக்கு அதிகாரிகள் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Amaravathi ,KH Road, Ayanavaram ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...