×

ரூ.4.50 கோடி முறைகேடு செய்த தலைவர், து.தலைவர் பதவி நீக்கம்

 

செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், தென்மேல்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜன், துணை தலைவர் சாந்தகுமாரி. இவர்கள், கடந்த 2021ம் ஆண்டு முதல் பொறுப்பில் இருந்து வருகின்றனர். இருவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள். இந்நிலையில், ஊராட்சி நிதியிலிருந்து கோவிந்தராஜனும் சாந்தகுமாரியும் 4 மாதத்தில் உரிய செலவின சீட்டு இல்லாமல் ரூ.4.50 கோடி வரை செலவழித்துள்ளனர்.அதற்கான ஆவணங்கள் மற்றும் தீர்மானங்கள் இல்லை.

இது சம்பந்தமாக ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் தென்மேல்பாக்கம் ஊராட்சி அலுவலகத்தில் நேரடி ஆய்வு செய்து, கடந்த ஓராண்டுக்கு முன் இருவரின் செக்கில் கையெழுத்திடும் அதிகாரம் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, இருவரிடமும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி, மாவட்ட கலெக்டர் ராகுல்நாத்திடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

பின்னர், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகளின் அறிக்கையை ஏற்று, உரிய செலவின சீட்டு இல்லாமல் கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து முறைகேட்டில் ஈடுபட்ட கோவிந்தராஜன், சாந்தகுமாரி ஆகியோரை நேற்று முன்தினம் மாலை பதவி நீக்கம் செய்து மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டுள்ளார்.

The post ரூ.4.50 கோடி முறைகேடு செய்த தலைவர், து.தலைவர் பதவி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Deputy Chairman ,Chengalpattu ,Kattangolathur Union ,South West Panchayat Council ,President ,Govindarajan ,Vice President ,Santhakumari ,Thalaivar ,Dinakaran ,
× RELATED மாவடியில் திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு