×

மின்னல் தாக்கி மீனவர் பலி

தரங்கம்பாடி: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி அருகே பெருமாள்பேட்டையை சேர்ந்தவர் கண்ணபிரான் (32). மீனவரான இவர், நேற்றுமுன்தினம் மதியம் தனது அண்ணன் அருண் (38) மற்றும் 3 பேருடன் பைபர் படகில் தரங்கம்பாடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் மீன்பிடிக்க சென்றார். நேற்று அதிகாலை 5 மணியளவில் மீன்களுடன் துறைமுகம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் 4 பேர் கரை திரும்பினர். அருண் மட்டும் படகில் இருந்தபோது, மின்னல் தாக்கியதில் அவர் உடல் கருகி பலியானார். இதேபோல் மற்றொரு படகில் வந்த குட்டியாண்டியூரை சேர்ந்த ராஜேந்திரன் (46) மின்னல் தாக்கி காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

The post மின்னல் தாக்கி மீனவர் பலி appeared first on Dinakaran.

Tags : Tharangambadi ,Perumalpet ,Tharangambadi, Mayiladuthurai district ,Dinakaran ,
× RELATED பறக்கும் படை சோதனையில் சிக்கிய ₹3.31...