×

தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் படையெடுப்பு: ஜிஎஸ்டி சாலையில் நெரிசல்

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர்.தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக, தீபாவளி பண்டிகையை தங்களின் சொந்த ஊரில் கொண்டாட சென்னையில் இருந்து தென் மாவட்டத்தை நோக்கி மக்கள் படையெடுத்து வருகின்றனர்.இதன் காரணமாக செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள்கோவில் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சிங்கபெருமாள்கோவில் மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அனைத்து வாகனங்களும் நீண்ட வரிசையில் காத்திருந்ததால் வாகன ஒட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சிங்கபெருமாள்கோவில் பகுதியில், போக்குவரத்து மற்றும் சட்டம் – ஒழுங்கு போலீசார் தொடர்ந்து போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில் சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை வண்டலூர் சரக துணை ஆணையர் ஜெயராஜ் தலைமையில் மறைமலைநகர் காவல் நிலைய ஆய்வளர் முத்து சுப்பிரமணியன் மேற்பார்வையில் போலீசார் சரி செய்தனர்.

The post தீபாவளி பண்டிகை, தொடர் விடுமுறையையொட்டி தென் மாவட்டங்களுக்கு ஏராளமானோர் படையெடுப்பு: ஜிஎஸ்டி சாலையில் நெரிசல் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Chennai ,southern ,
× RELATED வேலை வாங்கி தருவதாக மோசடி உஷாராக...