×

தீபாவளி பண்டிகை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடை, இனிப்பு: எம்எல்ஏ வழங்கினார்

 

ஆண்டிபட்டி, நவ. 10: ஆண்டிபட்டி ஒன்றிய, பேரூர் திமுக கட்சி நிர்வாகிகளுக்கும், கிளைச் செயலாளர்களுக்கும், தொண்டர்களுக்கும் தீபாவளி பண்டிகை முன்னிட்டு புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆண்டிபட்டி நகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் கட்சி நிர்வாகிகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளையும் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

இதில் ஆண்டிபட்டி திமுக கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியத்தை சேர்ந்த கட்சி நிர்வாகிகள், கிளைச் செயலாளர்கள் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள், கவுன்சிலர்கள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி உள்ளிட்ட சார்பு அணி நிர்வாகிகளுக்கும் புத்தாடைகள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், பேரூர் செயலாளர் சரவணன், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் செஞ்சூரி செல்வம், விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர் சேதுராஜா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post தீபாவளி பண்டிகை முன்னிட்டு திமுக நிர்வாகிகளுக்கு புத்தாடை, இனிப்பு: எம்எல்ஏ வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : Diwali festival ,Dimuka ,Andipathi Union ,Beroor Dimuka ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் தீபாவளிக்கு முன்...