×

வீட்டில் குழந்தை பிரசவித்த இளம்பெண் பலி

திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சாவடியூரை சேர்ந்தவர் ரமேஷ்(28), பொக்லைன் ஆபரேட்டர். இவரது மனைவி ஹேமலதா(23). இவர்களுக்கு மெய்யழகன் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் மீண்டும் ஹேமலதா கர்ப்பமானார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், நேற்று முன்தினம் காலை பிரசவவலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் அட்மிட் ஆக சொல்லி உள்ளனர். ஆனால் அவர் அட்மிட் ஆகாமல் வீட்டிற்கு சென்று விட்டார். வீட்டிற்கு சென்ற சில மணி நேரத்தில் ஹேமலதாவிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. பிரவத்திற்கு பின் ரத்தப்போக்கு அதிகமாகி சுயநினைவை இழந்தார். நேற்று அதிகாலை ஹேமலதா பரிதாபமாக இறந்தார். குழந்தை நலமாக உள்ளது.

The post வீட்டில் குழந்தை பிரசவித்த இளம்பெண் பலி appeared first on Dinakaran.

Tags : Tirupathur ,Ramesh ,Sawadiur ,Uthangarai ,Krishnagiri district ,Hemalatha ,Bali ,
× RELATED திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி...