×

கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம்

கோவை: கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. மேலும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் ராகிங் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என கோவை பி.எஸ்.ஜி. கல்லூரியில் நடந்த ராகிங் சம்பவத்தை தொடர்ந்து கல்லூரி கல்வி இயக்குநர் கீதா உத்தரவிட்டுள்ளார். கல்லூரியில் உள்ள ராகிங் தடுப்பு குழுக்கள் மூலம் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டு உறுதிப்படுத்த வேண்டும், ராகிங் குறித்து மாணவர்களின் புகார்களை எளிதில் பெரும் வகையில் கல்லூரி முதல்வர்கள் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. உத்தரவுகளை செயல்படுத்துவதில் சுணக்கம் காட்டக் கூடாது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

The post கல்லூரிகளில் ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: கல்லூரி கல்வி இயக்ககம் appeared first on Dinakaran.

Tags : Directorate of College Education ,Coimbatore ,Dinakaran ,
× RELATED உதவி பேராசிரியர் பணி நியமனத்துக்கான...