×

சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு தலைமறைவான மரப்பட்டறை உரிமையாளர் போலீசில் சரண்

குளச்சல் : இரணியல் அருகே சிறுவனிடம் ஓரினசேர்க்கையில் ஈடுட்ட மரப்பட்டறைகாரர் போலீசில் சரண் அடைந்தார். அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இரணியல் அருகே குசவன்குழியை சேர்ந்தவர் ரெவி (50). அந்த பகுதியில் மரப்பட்டறை வைத்து தச்சுத் தொழில் செய்து வருகிறார். பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடந்த சில நாளாக ரெவி வீட்டின் அருகே வசித்து வருகின்றனர். இந்த குடும்பத்தை சேர்ந்த 8ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் அந்த பகுதியில் உள்ள கடைக்கு வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த மாதம் 29ம் தேதி மாலை வழக்கம்போல் சிறுவன் பொருட்கள் வாங்க கடைக்கு சென்றான். அபோது ரெவி சிறுவனிடம் பேச்சுக்கொடுத்து நைசாக அங்குள்ள ஒரு காலி கட்டிடத்திற்கு அழைத்து சென்றாராம். பின்னர் சிறுவனிடம் தகாத செயலில் ஈடுபட்டாராம். உடனே சிறுவன் ரெவியின் கையை தட்டிவிட்டு தப்பியோடி விட்டான்.

இந்தநிலையில் கடந்த 1ம் தேதி சிறுவன் மீண்டும் கடைக்கு செல்லும்போது ரெவி மீண்டும் சிறுவனை அழைத்து காலி கட்டிடத்திற்குள் சென்றுள்ளார். அங்கு மீண்டும் சிறுவனிடம் தகாத செயலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனை சிறுவனின் அண்ணன் பார்த்து சத்தமிட்டான். உடனே ரெவி ‘இனிமேல் இப்படி செய்ய மாட்டேன். நீ இதை வெளியே சொன்னால் தற்கொலை செய்வேன்’ என்று சிறுவனின் அண்ணனை மிரட்டினாராம்.

இது குறித்து சிறுவனின் தாய் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் மகளிர் போலீசார் ரெவி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்தனர். இதை அறிந்த ரெவி தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் ரெவி குளச்சல் மகளிர் போலீசில் சரணடைந்தார்.உடனே போலீசார் அவரை கைது செய்து நாகர்கோவில் போக்சோ கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தினர். கோர்ட் ரெவியை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து அவர் நாகர்கோவில் சிறையிலடைக்கப்பட்டார்.

The post சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு தலைமறைவான மரப்பட்டறை உரிமையாளர் போலீசில் சரண் appeared first on Dinakaran.

Tags : Kulachal ,Iranial ,Saran ,
× RELATED இரணியல் அருகே நள்ளிரவில் குளத்தில் கவிழ்ந்த லாரி