தொண்டி, நவ.8: தொண்டி அருகே நம்புதாளை ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக தொண்டி அருகே உள்ள நம்புதாளை ஊராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியார்களுக்கு புத்தாடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில் ஊராட்சி மன்ற தலைவர் பாண்டிச் செல்வி ஆறுமுகம் தலைமையில் ரோட்டரி சங்க துணை ஆளுனர் வெற்றி வேலன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் துரை ஜெயபாண்டியன், செயலாளர் மகாலிங்கம், முன்னாள் தலைவர் சிவராம கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
The post தூய்மை தொழிலாளர்களுக்கு புத்தாடை வழங்கல் appeared first on Dinakaran.