×

திருத்தணி முருகன் கோயிலில் 14ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்: தினந்தோறும் லட்சார்ச்சனை

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் வரும் 14ம் தேதி முதல் கந்தசஷ்டி திருவிழா தொடங்குகிறது. இதில் தினந்தோறும் லட்சார்ச்சனை நடைபெறவுள்ளது. திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தீபாவளி நோன்பு மறுநாள் முதல் கந்த சஷ்டி, புஷ்பாஞ்சலி மற்றும் லட்சார்ச்சனை திருவிழா 7 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், வரும் 14ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்குகிறது. அதன்படி தினமும் அதிகாலை 5 மணியளவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும், காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை உற்சவர் சண்முகர் மலைக்கோயில் காவடி மண்டபத்தில் லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

முதல் நாளான 14ம் தேதி காலை மூலவருக்கு புஷ்ப அலங்காரமும், மாலையில் திருக்கோயில் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரண்டாம் நாளான 15ம் தேதி மூலவருக்கு பட்டு அலங்காரமும், 3ம் நாளான 16ம் தேதி மூலவருக்கு தங்க கவச அலங்காரமும், 4ம் நாளான 17ம் தேதி மூலவருக்கு திருவாபரண அலங்காரமும் நடைபெறுகிறது. 5ம் நாளான 18ம் தேதி மூலவருக்கு வெள்ளிக் கவச அலங்காரமும், 6ம் நாளான 19ம் தேதி கல்யாண உற்சவருக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. காவடி மண்டபத்தில் உற்சவர் சண்முகப்பெருமானுக்கு, 18ம் தேதி மாலையில் புஷ்பாஞ்சலியும், 19ம் தேதி நண்பகலில் உற்சவர் சண்முகருக்கு திருக்கல்யாணத்துடன் கந்தசஷ்டி விழா நிறைவடைகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவல் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையரும் செயல் அலுவலருமான ரமணி, அறங்காவலர்கள் உஷாராவி, மோகனன், சுரேஷ்பாபு, நாகன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் 14ம் தேதி கந்தசஷ்டி திருவிழா தொடக்கம்: தினந்தோறும் லட்சார்ச்சனை appeared first on Dinakaran.

Tags : Gandashashti festival ,Tiruthani Murugan Temple ,Daily laksharchanai ,Thiruthani ,of Gandashashti ,Thiruthani Murugan Temple ,Daily laksharchan ,Kanthashashti festival ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை...