×

திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 10ம் மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபர் கைது: ஒரு சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்கு

திருவள்ளூர்: திதிருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர், கசவநல்லாத்தூரில் வசித்து வரும் 15 வயது சிறுமி. இவர் கடம்பத்தூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் பன்னீர்செல்வம். இவரது மகன் ஆரா என்கிற ஆரோக்கியராஜ் (23). இவர் வீடு வீடாகச் சென்று பால்பாக்கெட் போடும் தொழில் செய்து வந்தார். இவர் அடிக்கடி மாணவியின் வீட்டிற்குச் சென்று அவரது தந்தையிடம் பேசிவிட்டு செல்வது வழக்கம். இந்நிலையில் கடந்த 20.1.2022 அன்று சிறுமியின் தந்தை வீட்டில் இல்லாதபோது வந்த ஆரோக்கியராஜ் மாணவியிடம் நான் உன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி மாணவியிடம் உடலுறவு வைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து கடந்த 2022 ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை பலமுறை உறவு வைத்துக் கொண்ட ஆரோக்கியராஜ் அதன் பிறகு மாணவியுடன் பேசவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் 15 வயது சிறுமியிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதே பகுதியை சேர்ந்த சுப்பு என்கிற சுகுவனேஸ்வரன் (22) என்ற இளைஞரும் கடந்த 20.10.2023 அன்று கட்டாயப்படுத்தி உடலுறவு வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் கடந்த 3.11.2023 அன்று மாணவிக்கு மயக்கம் ஏற்படவே வீட்டின் அருகில் இருந்தவரிடம் கூறியுள்ளார். உடனடியாக அவரை கடம்பத்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்று டாக்டரிடம் காண்பித்துள்ளனர்.

அவரை பரிசோதனை செய்த டாக்டர் உடனடியாக அவரை திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மாணவி திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின், சப் இன்ஸ்பெக்டர் சுசீலா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து ஆரோக்கியராஜை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 14 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுகு என்ற சுகுவனேஸ்வரனை போலீசார் தேடி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: காசிமேடு பகுதியை சேர்ந்தவர் ரம்யா (34). மந்தைவெளியில் உள்ள தனியார் பள்ளியில் ஹவுஸ் கீப்பிங் வேலை பார்த்து வருகிறார். பெற்றோரை இழந்த இவரது உறவினரின் 8 வயது மகளை, ரம்யா வளர்த்து வருகிறார். சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 4ம்தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது பக்கத்து வீட்டை சேர்ந்த ஆறுமுகம் (47), சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டை சேர்ந்தவர் ஓடிவந்ததும், ஆறுமுகம் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். தகவல் அறிந்த சிறுமியின் ரம்யா, ராயபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஆறுமுகத்தை தேடி வந்தனர். நேற்று அதே பகுதியில் பதுங்கி இருந்த ஆறுமுகத்தை போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி 10ம் மாணவியை கர்ப்பமாக்கிய வழக்கில் வாலிபர் கைது: ஒரு சிறுவன் உள்பட 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,Kadambathur, Kasavanallathur ,Thiruvallur ,Kadambathur Government Higher Secondary School ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...