×

பாணாவரம் அருகே ஆபத்தான பழைய பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பாணாவரம்: பாணாவரம் அருகே ஆபத்தான பழைய பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டிடம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரம் அருகே உள்ள காட்டுப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், 175க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.   இந்நிலையில், இங்கு கடந்த 2007- 2008ம் ஆண்டு, ஒன்றிய பள்ளிகள் புனரமைப்பு திட்டத்தில், புனரமைக்கப்பட்டு, கட்டப்பட்ட பள்ளி கட்டிடம், மிகவும் சேதம் அடைந்து பயன்பாட்டில் இல்லாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது இங்குள்ள பள்ளியில், அதிகமான மாணவர்கள் படித்து வருவதால், மாணவர்களுக்கு போதிய வகுப்பறைகள் இல்லை. பழைய பள்ளி கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய  கட்டிடம் கட்டினால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும் பழைய கட்டிடம் ஆபத்தான நிலையில் உள்ளதால், விளையாடச் செல்லும் மாணவர்கள் அடிக்கடி கட்டிடத்தின் உள்ளே சென்று வருவதாலும்,  தொடர் கனமழை பெய்து வரும் இந்நேரத்தில், அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம், ஊர் பொதுமக்கள் சார்பில் சேதமடைந்த பழைய பள்ளி கட்டிடத்தை இடிக்க கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுதொடர்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், பருவ மழைக்காலத்தில் அசம்பாவிதம் ஏற்படாவண்ணம், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, பழைய கட்டிடத்தை இடித்து, புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post பாணாவரம் அருகே ஆபத்தான பழைய பள்ளி கட்டிடத்தை அகற்ற வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Panavaram ,Ranipet ,Dinakaraan ,
× RELATED வேலூர், ராணிப்பேட்டை மாவட்ட...