×

அரசு நிதியுதவி பள்ளி முன் பெற்ேறார், மாணவர்கள் தர்ணா போராட்டம் தலைமையாசிரியர் நியமிக்க கோரிக்கை சந்தவாசல் அருகே துளுவ புஷ்பகிரியில்

கண்ணமங்கலம், நவ.7: சந்தவாசல் அருகே துளுவ புஷ்பகிரியில் அரசு நிதியுதவி பள்ளியில் தலைமை ஆசிரியர் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அருகே துளுவ புஷ்பகிரியில் அரசு நிதி உதவி தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை 49 பேர் ஆங்கில வழி கல்வியில் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் கடந்த 3ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் இல்லாமல் ஒரே ஒரு ஆசிரியர் மட்டும் ஒரே வகுப்பில் அனைவரையும் அமர வைத்து பாடம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அரையாண்டு தேர்வு முடிந்தும், ஆங்கில வழி பாடநூல் இப்பபள்ளிக்கு வழங்கப்படவில்லை எனவும், தமிழ் வழி பாடநூலை படிக்க வேண்டும் என வட்டார கல்வி அலுவலர் சுந்தர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் நேற்று திடீரென, ஆங்கில வழி பாடம் இருந்தால் மட்டுமே மாணவர்களை பள்ளிக்கு அனுப்வோம் எனக்கூறி வகுப்பறையில் இருந்து மாணவர்களை வெளியேற்றி பள்ளி முன்பு மாணவர்களும் பெற்றோரும் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும், ஆங்கில வழி கல்வி முறை தொடர வேண்டும். தலைமை ஆசிரியர் பணியிடம் உடனே நிரப்பப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர்.

The post அரசு நிதியுதவி பள்ளி முன் பெற்ேறார், மாணவர்கள் தர்ணா போராட்டம் தலைமையாசிரியர் நியமிக்க கோரிக்கை சந்தவாசல் அருகே துளுவ புஷ்பகிரியில் appeared first on Dinakaran.

Tags : Tuluva Pushpakiri ,Sandavasal ,Kannamangalam ,Tuluva ,Pushpagiri ,Chandavasal ,Tuluva Pushpagiri ,
× RELATED ஆரணி அருகே அத்தியூர் மலையில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது..!!