×

மல்யுத்த போட்டிக்கு அரசு கலைகல்லூரி மாணவர்கள் தேர்வு

 

கரூர், நவ. 7: மாநில அளவிலான மல்யுத்த போட்டிக்கு கரூர் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மல்யுத்தம் சங்கம் சார்பாக சேலத்தில் மாநில அளவிலான மல்யுத்த போட்டி நடைபெறவுள்ளது. இதில், கலந்து கொண்டு விளையாட, கருர் மாவட்டம் அரவக்குறிச்சி அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் வினோத், சாம் பிரசாத், கவியரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களை, கல்லூரி முதல்வர், உடற்கல்வி துறை இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் அனைவரும் பாராட்டினர்.

The post மல்யுத்த போட்டிக்கு அரசு கலைகல்லூரி மாணவர்கள் தேர்வு appeared first on Dinakaran.

Tags : Government Arts College ,Karur ,Karur Aravakurichi ,Dinakaran ,
× RELATED மூவர்ண கொடியை மதிக்க வேண்டும்