×

கடையம் அருகே கிணற்றில் விழுந்த மானை வனத்துறையினர் மீட்டனர்

கடையம், நவ.7: கடையம் அருகே கிணற்றில் தவறி விழுந்த மானை வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். தென்காசி மாவட்டம் கடையம் அருகே முதலியார்பட்டி பள்ளிவாசல் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சித்திக். இவர் அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான தோட்டத்தை பராமரித்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் இங்கு வழித்தவறி வந்த சுமார் 5 வயதுடைய பெண் மான் ஒன்று, தோட்டத்தில் உள்ள கிணற்றில் விழுந்து தண்ணீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருப்பது. இதுகுறித்து தகவலறிந்ததும் கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி பிறப்பித்த உத்தரவின் பேரில் வனக்காப்பாளர் சக்திவேல் தலைமையில் விரைந்துவந்த வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ் மற்றும் கனகராஜ் உள்ளிட்டோர், பெண் மானை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் வனப்பகுதியில் கொண்டுவிட்டனர்.

The post கடையம் அருகே கிணற்றில் விழுந்த மானை வனத்துறையினர் மீட்டனர் appeared first on Dinakaran.

Tags : Kadayam ,Kadayam, Tenkasi district ,Dinakaran ,
× RELATED கடையம் அருகே சோளத்தட்டையில் பதுங்கிய ராட்சத மலைப்பாம்புகள்